வீரமறவர்களாக திகழ்ந்த பல பல மனிதர்களை வரலாற்றில் காணலாம். ஆனால், அவர்களிடம் ஒழுக்கச் சிறப்பு ஒன்றுகூட இருக்காது. ஒழுக்கத்தில் உயர்ந்த மானுடர் பலர் இருப்பர். ஆனால், அவர்கள் விவேகிகளாகவோ, மதியூகிகளாகவோ இருக்கமாட்டார்கள். இருபெரும் பண்புகளையும் ஒருங்கே பெற்றவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அவர்களிடம் கல்வியும், அறிவுச் சிறப்பும் அறவே காணப்படாது. உமரவர்களின் வாழ்க்கையை பல்வேறு கோணங்களிலும் சீர்தூக்கி பார்க்கும்போது அவர்கள் அலெக்ஸாண்டராகவும் இருந்துள்ளார்கள், அரிஸ்டாட்டிலாகவும் இருந்துள்ளார்கள். ஸுலைமானாகவும் இருந்துள்ளார்கள். மஸீஹாகவும் (இயேசு) விளங்கியுள்ளார்கள். தைமூராகவும் திகழ்ந்துள்ளார்கள், நவ்ஷீர்வானாகவும் விளங்கியுள்ளார்கள்.
No comments:
Post a Comment
readers