ஒரு தலைமுறை சீர்கெட்டுப் போனால் அதனால் ஏற்படும் எல்லா விளைவுகளுக்கும் நாம் காரணமாக மாறிவிடுவோம். இந்த உள்ளச்சம் நம் உள்ளத்தில் என்றென்றும் இருந்தாக வேண்டும். நம்முடைய குழந்தைகளை மிகப்பெரிய சான்றோர்களாக, சாலிஹீன்களாக, எதிர்காலத்தில் உலகாளும் ஆட்சியாளராக, டாக்டர்களாக, இன்ஜீனியர்களாக, அறிவிலும், கல்வியிலும் தலைசிறந்தவர்களாக, தகுதி படைத்தோராக உருவாக்க வேண்டும் என்றால் நம்முடைய குழந்தைகள் முதலில் நல்ல மனிதர்களாக உருவாக வேண்டும். ஓரிறைவனை நம்புகின்ற உண்மையான வாழ்க்கையான மறுமை வாழ்க்கைக்கு பயப்படுகின்ற நல்லொழுக்கம் நிரம்பியவர்களாக மனிதன் என்னும் சொல்லிற்கு முற்றிலும் பொருந்துபவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவே இந்நூலை வெளியிடுகின்றோம்.
No comments:
Post a Comment
readers